செவ்வாய், 24 டிசம்பர், 2013

மதுபான கடைகளை நாளை மூடுமாறு உத்தரவு!





கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை மதுபான கடை கள் மூடப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சகல மது பான கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப் படுகிறது. கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத் திற்கு மதிப்பளிக்காது கடைகளை திறக்கும் மதுபான கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இவ்வாறு கடைகளை திறக்கும் நபர்களை கைது செய்ய விசேட தேடுதல் வேட்டை நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: