சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தில் காணப்படும் எரிமலை துகள்கள் மற்றும் பிற வாயுக்களின் அளவை கொண்டு நிலவின் நிறம் மாறுபடும். சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆனது வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஏற்படும். அமெரிக்காவில் இன்று ஏற்படும் சந்திர கிரகணம் அதன் பின்பு வருகிற 2019ம் ஆண்டு தான் தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இங்கிலாந்து மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக காண்பதற்கு வசதியாக திட்டமிட்டுள்ள நாசா நிறுவனம், அதற்காக நாசா டி.வி. மற்றும் நாசா.கவ் இணையதளம் ஆகியவற்றின் வழியாக அதனை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. இதனை தவிர்த்து ஜார்ஜியா மாகாணத்தின் கொலம்பஸ் மாநில பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கோகா கோலா அறிவியல் மையம் மற்றும் ஸ்லூ.காம் ஆகிய இணையதளங்கள் வழியாகவும் நேரடியாக சந்திர கிரகணத்தை காணலாம். |
---|
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
சிரமதான நிகழ்வு
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் சிரமதான நிகழ்வு நடைபெற்றது .
இந் நிகழ்வில் அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் ,சமூக சேவை அமைப்புக்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர் .
வியாழன், 10 ஏப்ரல், 2014
மாபெரும் திவி நெகும விற்பனைச் சந்தை
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் - சிங்கள புத்தாண்டு மாபெரும் திவி நெகும விற்பனைச் சந்தை இன்று (10) காலை நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவு ம், மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் யூ.ஜி.எல்.அனுருத்த பியதாஸ மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவு ம் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து புத்தாண்டு மலிவு விற்பனைச் சந்தையை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சுயதொழில் புரிபவர்களுக்கான நுண்கடன் திட்டத்தின் கீழ் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த புத்தாண்டுச் சந்தையில் இன மத வேறுபாடின்றி தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். சமுர்த்தி திட்டத்தில் சுய தொழில் புரிவோரின் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஹசன் அலி
நாட்டில் மேற்கொள்ளப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஒரு காலக்கெடு வழங்க வேண்டும்.
தவறினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
பொது பலசேனா அமைப்பு அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் முஸ்லிம்களின் மீள்
குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது தொடர்பில் கொழும்பு புக்கர்ஸ்
மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பைஸல் காசீம், பாரூக் முத்தலிப்பாவா உட்பட அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தேசிய சூறா கவுன்ஸில் முஸ்லிம்களின் செயலகம் முஸ்லிம் மீடியா போரம் ஸ்ரீலங்கா ஜமா அத்தே இஸ்லாமி ஐக்கிய முஸ்லிம் உம்மா, மஜ்லிஸுல் சூறா கிரஸன்ட் பவுண்டேஷன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஹசன் அலி தொடர்ந்தும் உரையாற்றுகையில் முஸ்லிம் எம்.பி. க்களும் முஸ்லிம் இயக்கங்களும் அடிக்கடி கூட்டங்கள் கூடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு அறிக்கைகள் விடுவதிலும் ஜனாதிபதிக்கு மகஜர் சமர்ப்பிப்பதிலும் எதுவித பிரயோசனமும் இல்லை. வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு எதிரான பிரசாரங்கள், நடவடிக்கைகள் மாத்திரமல்ல ஏராளமான பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூகம் முகம் கொடுத்துள்ளது.
இந்த பிரச்சினைகளில் அவசரமாக உடனடியாக தீர்கப்பட வேண்டியவற்றை இனம் கண்டு அவற்றைத் தீர்க்க அரசாங்கத்திற்கு காலக்கெடு கொடுக்க வேண்டும். அரசு பிரச்சினைகளை தீர்க்க தவறும் பட்சத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை ஒரு மாதத்துக்கு பகிஷ்கரித்து இந்த செய்தியை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்.
அரசு மிக பலம் பொருந்தியதாக இருக்கின்றது. இந்தப் பலத்தை நாமே கொடுத்து வருகின்றோம். எமக்குள் ஏற்பட வேண்டிய கட்சி பேதமற்ற ஒற்றுமையே சமூகத்துக்கு நன்மை பயக்கும். வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.அம்பாறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் காணி இராணுவத்தினரால் கையேற்கப்பட்டுள்ளது. கிழக்கில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் காணி சொந்த மக்களின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் புல்மோட்டையில் இவ்வாறு நடந்துள்ளது.
நாங்கள் அடிக்கடி கூட்டங்கள் கூடி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த கூட்டத்துக்கு 4 பாராளுமன்ற உறுப்பினர்களே சமுகமளித்துள்ளோம். நாம் தாமதியாது செயலில் இறங்கா விட்டால் எம்மீதான அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற ஒன்றியம் என்று ஒன்று இருக்கின்றது. இதனால் பயனுள்ள செயற்பாடுகள் நடைபெறுவதில்லை.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் பணியையே செய்கின்றது. முஸ்லிம்களின்
பிரச்சினைகள் சர்வதேச மட்டத்துக்குச் சென்று விட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
பொதுபலசேன, வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளதாக முன்வை த்துள்ள குற்ற ச்சாட்டுக்களை மறுத்து அது தொடர்பான தெளிவுகளை மகஜர் ஒன்றின் மூலம் ஜனா திபதியிடம் கையளிப்பதற்கும் நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)