செவ்வாய், 15 அக்டோபர், 2013


widgeo.net

இலங்கை அமைச்சரவை கின்னஸ் சாதனை

 

 உலகின் மிகப்பெரிய அமைச்சரவை அமைந்துள்ள நாடு இலங்கை என கின்னஸ் சாதனைகளை அறிக்கையிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியின் பிரகாரம், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 52பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இதுவே, உலக நாடுகளின் மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடு என கின்னஸ் சாதனை புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
அது மாத்தரமன்றி, மேற்படி பதவிப்பிரமாணத்தையடுத்தும் அடுத்தடுத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என பலர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
புதிதாக மேலும் 9 பிரதியமைச்சர்கள் கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 




widgeo.net

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குப்பை கூளங்களை அகற்றும் நிகழ்வு நேற்று (13.10.2013 ) நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்-MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் ஆலோசகருமான ஏ.எச்.எச்.எம்.நபார், சுகாதார பரிசோதகர் ஏ.கலீல், கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்  MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் ஜே.எம்.அயாஸ், தவிசாளர் ஜே.எம்..மிஹ்ளார் மற்றும் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஐ. நிரோஸ், அமைப்பாளர் எஸ். றுஸ்வின் உட்பட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.