வெள்ளி, 21 மார்ச், 2014

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானம்







இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீது எதிர்வரும் 28ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னரும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு முறை கொண்டுவரப்பட்ட பிரேரணைகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.