ஞாயிறு, 31 ஜூலை, 2011

குப்பைகளால் நிரப்பப்பட்ட நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கம் 



கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இம் மைதானம் கடந்த பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்  பட்டும் ,இன்று குப்பைகள் கொட்டும் தொட்டியாகவும் காணப்படுகின்றது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது . 

வாரத்திற்கு இரு தடவைகள் கல்முனை மாநகர சபையின் குப்பைகள் ஏற்றும் உளவு இயந்திரங்கள் வருகை தந்து அக் குப்பைகளை எடுத்துச் சென்று இவ் விளையாட்டு 
மைதானத்தில் வீசுகின்றனர் என்பது மிகையாகாதது. இதனால்  இம் மைதானம் விளையாடுவதற்கு பொருத்தம் இன்றிக் காணப் படுகின்றது.  இதனை அரசியல் தலைமைகளும் , இவ்வூர் மாநகர சபை உறுப்பினர்களும் கண் மூடித்தனமாக இருக்கின்றனர் . எனவே , சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளுமாறு பொது மக்களும், விளையாட்டு வீரர்களும் ,கழகங்களும் கேட்கின்றனர் இவை தொடர்பான காட்சிகள் கீழே