ஞாயிறு, 29 செப்டம்பர், 2013


widgeo.net

,lkhw;wKk; gpupahtpil itgtKk;

கல்முனை மாநகர சபையில் முகாமைத்துவ  உதவியாளராக  ஐந்து வருடங்களாக கடமையாற்றி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றலாகி சென்ற யு.முகம்மது இஸ்ஹாக்  அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் மாநகர முதவர் தலைமையில்  பிரியாவிடை வைபவம் நடை பெற்றது .

நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தை கொண்ட இஸ்ஹாக்  தனது அபிமானத்துக்கு உரியவர் என்றும்  எனது விசுவாசி என்றும் ஒப்படைக்கின்ற பணிகளை  உரிய நேரத்துக்குள் திருப்தியாக  செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டவர்  என்றும்  எனது அரசியலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்ற  சிறந்ததொரு ஊடகவியலாளர் என்றும்  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார் . அவரது இடமாற்றத்தை இரத்து செய்ய  கிழக்குமாகாண்  சபையில்  கடும் பிரயத்தனம் எடுத்தேன் .எனினும்  என்னுடன் அரசியல் காழ்புணர்ச்சி  கொண்ட ஒருசிலரால்  அது அரசியல் மயப்படுத்தப் பட்டு  ஐந்து வருடதுக்குமேல் ஒரே சேவை நிலயத்தில்  தொடர்ந்து சேவையாற்ற முடியாதென்ற  நிலையில்  எனக்கு விருப்பமில்லாமலே  ஜனவரிக்கு செல்ல வேண்டியவரை ஏப்ரல்  வரை வைத்திருந்து அனுப்பினேன் .என முதல்வர் தெரிவித்தார் 




அவர் இடமாற்றலாகி சென்றாலும்  என்னுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார்   எனக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் . இவரது சேவையை பாராட்டி  நடைபெற்ற  நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர்  ஜே.லியாகத் அலி ,கணக்காளர் எல்.ரீ சாலிதீன் ,நிருவாக அதிகாரி ஏ.அலாவுதீன்  உட்பட உத்தியோகத்தர் ஊழியகள் கலந்து கொண்டனர்.

widgeo.net

சூரை மீன் எமனாக மாறியது ஒருவர் மரணம் பலர் பாதிப்பு

கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில்   புதன்கிழமை சூரை மீன் கறியை உட்கொண்டதால்  ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை 80 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
புதன்கிழமை கிண்ணியா , மூதூர் பகுதிகளில் அதிகளவில் சூரை மீன் வலைகளில் பிடிபட்டது.  இதனால் பெரும்பாலான வீடுகளில் சூரை மீன் சமைக்கப்பட்டது. இந்த மீன் கறியை உண்டவர்களுள் அதிகமானோருக்கு தலைவலி, வயிற்றோட்டம், உடல் வீக்கம் என்பன ஏற்பட்டன. இதற்காகவே இவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மூதூரில் சூரைமீன் உண்ட  ம.பெசாரியன் (56 வயது ) என்பவர் மரணமடைந்துள்ளார். இதனை  விட 26 பேர் மூதூர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 இற்கும் மேற்பட்டோர் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.


இதேவேளை கிண்ணியாவில் சூரை மீன் கறியை உண்ட அறுவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 40 பேர்  வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொது மக்கள் உண்ட சூரை மீனின் பகுதிகள் விஷேட பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.