செவ்வாய், 17 டிசம்பர், 2013



பிறின்ஸ் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழாவும், பரிசளிப்பு வைபவமும்


நற்பிட்டிமுனை 'பிறின்ஸ்' பாலர் பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வும், பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் ஸ்தாபகர் எம்.எம். றியாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வரும், நீதி அமைச்சின் இணைப்புச் செயலாளருமாகிய  றஹ்மத் மன்சூர் அவர்களும், விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லுரியின் விரிவுரையாளர். மெளலவி ஏ.எல். நாஸிர்கனி அவர்களும், முன்னார் மாநகர சபை உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர்பீட உறுப்பினருமாகிய யூ.எல். தௌபீக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் உரையாற்றுவதையும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளையும், படங்களில் காணலாம்.