கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை அஷ்ரப் மைதானம் விளையாட தகுதியற்ற நிலையில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. மாரி காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கி சேற்று நிலமாகவும் ,இன்று குப்பைகள் கொட்டும் திடலாகவும் காட்சியளிக்கின்றது.
இதனை பல் வேறுபட்ட அரசியல்வாதிகளுடனும், மந்திரிகளுடனும் மேன்முறை செய்தும் எதுவித பயனும் கிடைக்காமால் புறக்ககணிக்கப் பட்டதால் இன்று ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இம் மைதானத்திற்கு மண் கொட்ட முன்வந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ் அறிவித்துள்ளார்.