திங்கள், 28 அக்டோபர், 2013


widgeo.net

ரூ.2000 நாணயத்தாள்கள்: எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் கோரிக்கை


2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் குறித்து கவனமாக இருக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு மில்லியன் ரூபாவுக்கு  சமவலுவான போலி இரண்டாயிரம் ரூபா தாள்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் மாலபேயில் கண்டுபிடித்தனர். இதனையடுத்தே மேற்கண்டவாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த போலி நாணயத்தாள்கள் ஏற்கெனவே புழக்கத்தில் விடப்பட்டுள்ளது எனவும் பி 67799159 இலக்கம் கொண்ட இந்த போலி நாணயத்தாள்கள் கைக்கு வந்தால் பொலிஸுக்கு அறிவிக்கும் படியும் பொலிஸார் தெரிவித்தனர்.