ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை நற்பிட்டிமுனையில் மூன்று கட்சிகள் போட்டி

 

இம்முறை நடைபெறவிருக்கும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக சி.எம்.முபீத் -ஏ, ஜி,நௌசாத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யூ.எல்.தௌபீக் - எம்.எல்.சால்டீன் (சமீர்)ஆசிரியர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் எச்.எம்.எம். நபார் போன்றோர் நற்பிட்டிமுனை சார்பாக வேட்புமனு செய்திருக்கின்றனர்.

எனவே, நமது வாக்குகளை உதாசீனப் படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை இனியாவது  வென்றெடுக்க வாக்களிப்போம்.  

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் இம் முறை நற்பிட்டிமுனையில் ஐ.தே. கட்சி போட்டி


இம்முறை கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் போட்டி இடுவதற்காக நற்பிட்டிமுனை சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் இளம் துடிப்பு முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக மாணவ பேரவைத் தலைவர் வர்த்தக முகாமைத்துவபீடம் மற்றும் விளையாட்டுப் பேரவைத் தலைவருமான ஏ .எச். எச்.எம். நபார் களமிறங்கி இருக்கிறார்.  

சனி, 27 ஆகஸ்ட், 2011

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக நிசாம் காரியப்பர் நியமனம்






(நன்றி : நேசம் நெட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளரும் , பிரபல சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையினது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.