ஞாயிறு, 27 நவம்பர், 2011

 
 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட துரைவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் நேற்று  விஜயம் 

அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள துரைவந்தியமேடு குடியேற்ற கிராமம் வெள்ளத்தில் மூழ்கி சூழப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு  நேற்று கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, நகர சபை உறுப்பினர்ஏ.எச்.எச்.எம். நபார் உட்பட அதிகாரிகள் பலரும் கடற்படை அதிகாரிகளும் அங்கு சென்றனர்.

அங்கு சென்ற அதிகாரிகள் அம்மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சமைத்த உணவையும் வழங்கினர். கல்முனை கிட்டங்கி வீதி தாம்போதியின் மேலாக போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ளம் பாய்வதால் அக்குடியேற்ற கிராம மக்களின் போக்குவரத்திற்கென இராணுவத்தினர் இயந்திரப் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

பட்ஜெட்-2012; அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் பல சமூக நலத்திட்ங்கள்.


நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்குக் கொண்டு செல்லுவதையும், வலுவான துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகளையும் உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்றுப் பிற்பகல் சுபநேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற
ரீதியில் 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த உரையின்போது அவர் தெரிவித்த முன்மொழிவுகளில் முக்கியமானவைகள் வருமாறு,
அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு
சகல அரசாங்க ஊழியர்கள் மற்றும் படை வீரர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவிநிலையல்லாத தரத்தினருக்கு இந்த அதிகரிப்பு 2012 ஜனவரியிலிருந்து வழங்கப்படும். பதவிநிலை அலுவலகர்களு க்கான சம்பளம் 2012 ஜனவரியிலிருந்து 5 சதவீதமும், மிகுதி 5 வீதம் 2012 ஜூலையிலிருந்தும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
ஓய்வூதியம் அதிகரிப்பு
2004க்கு முன்னர் இளைப்பாறியவர்க ளுக்கு மேலதிகமாக மாதாந்தக் கொடுப்பனவு 1000 ரூபா வழங்கப்படும். 2004-2006 காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கு 500 ரூபாவும் வழங்கப்படும். இக்கொடுப்பனவில் 2012 இல் ஜனவரியில் அரைவாசி யும் மற்றைய அரைவாசி 2012 ஜூலை யிலிருந்து வழங்கப்படும்.
சமுர்த்தி குடும்பங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
குறைவருமானம் பெறும் சிறிய குடும் பங்களுக்கு வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவான 210 ரூபா முதல் 615 ரூபா வரையான கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், குறைந்த வரு மானம் பெறும் பொதுவான குடும்பங் களுக்கு வழங்கப்பட்டு வரும் 900 ரூபா வினை 1200 ரூபாவாக அதிகரிப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இலத்திரனியல் வீசா வசதிகள்
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலத்திரனியல் வீசா முறைமூலம் இல ங்கையில் 48 மணித்தியாலங்களுக்குக் குறைவான காலத்தினை செலவிடும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து எவ் வித வீசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
பஸ், லொறி மீதான பெறுமதி சேர்வரி நீக்கம்
சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் உயர்தரத்தினை உறுதிப்படுத்தும்வகையில் புதிய பேருந்துகளின் இறக்குமதியினை மேற்கொள்வதற்கு வசதியாக அதற்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரி நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொருட்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகள், டிரக்குகள் மற்றும் லொறி இயந்திரங்களுக்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியையும் சுங்கத் தீர்வை யையும் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதேவேளை, பஸ்கள் மற்றும் லொறிகளுக்காகப் பயன்படுத்தப்படும் டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வையினை 50 வீதத்தால் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை நாணய மதிப்பிறக்கம்
நாடு நாணயமாற்று வீதத்தினை ஸ்திர மான ஒரு நிலையில் இருக்கின்ற அதே வேளை, இலங்கையுடன் போட்டியிடும் அயல் நாடுகள் அவற்றினது நாணயமாற்று வீதங்களை மதிப்பிறக்கம் செய்துள்ளன. எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாணயமாற்று வீதத்தினை 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர் மகளிர் பாதுகாப்பு
சிறுவர்கள் மற்றும் பெண்களின் நன்மைக்காக நிறுவனங்களினால் நடத்தப் படும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் விரிவாக்கல் அத்துடன் மாவட்ட செயலாளர்களின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் தர்மப் பாடசாலைகள் என்பவற்றுக்கு உதவுவதற்காக 150 மில் லியனை ஒதுக்கீடு செய்வதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு வலுவூட்டுதல்
வயது முதிர்ந்த கலைஞர்கள், பத்திரிகை யாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் காலத்துக்குக் காலம் வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவதன் மூலம் அவர்களது மரணச் சடங்குச் செலவீனங்களை ஈடுசெய்வதற்கு அவர்களது குடும்பங்களுக் கான உதவிகளை விரிவாக்குவதற்குத் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதிய மொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேநேரம், இந்த விசேட நிதியத்தினது வட்டியினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு மேலாக பங்களிப்பினை வழங்கியுள்ள சிரேஷ்ட கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர் களுக்கு மோட்டார் கார் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லாத கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.
கால்நடை அபிவிருத்தி
கால்நடை உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்கள் மீதான பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும். பால் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு அரசு மற்றும் தனியார் துறையினருக்கு வரிச்சலுகைகளும் வழங் கப்படும். பால் பண்ணையாளர்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு 3000 பசுக் களை இறக்குமதி செய்வதற்கும் நடவ டிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு விமான நிலையங்கள்
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விஸ்தரிப்பு, ஹம்பாந்தோட்டை சர்வதேச விமானநிலையம், பலாலி மற்றும் இரத் மலானை விமானநிலையங்களின் அபி விருத்தியுடன் கண்டி, நுவரெலியா, மட் டக்களப்பு, திருகோணமலை, ஹிங்கு ராங்கொட, சீகிரியா, அநுராதபுரம், இர ணைமடு போன்ற பிரதேசங்களில் உள்நாட்டு விமானநிலையங்கள் நிர்மாணிக் கப்படும், இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
வீடமைப்பு வசதி
நகர சேரிப் புறங்களில் வாழ்பவர்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50 ஆயிரம் வீடமைப்பு அலகுகளைக் கொண்ட பல்மாடித் தொடர் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர் களுக்கும், மற்றும் தொழில்முயற்சி தொடர்பான முகாமைத்துவத் திறன் வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். அத்தகைய முன்னெடுப்புக்களை ஊக்கு விக்கும் வகையில் வருமான வழிகள் அனைத்தினையும் 5 வருட காலப்பகுதிக்கு வரிவிலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் மொழி ஆய்வு கூடங் களை அமைக்கவென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சிங் களம் மற்றும் தமிழ் மொழிகள் போதிக் கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே§ நரம், சமூக சேவைகள் ஊடாக மொழி ஆற்றல்களை பிரபல்யப் படுத்துவதற்கும், புதிய தொலைத் தொடர்பாடல் வசதிகளை அறிமுகப்படுத்துவதற்குமென நடமாடும் மொழியாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட வுள்ளன. இதற்கென 100 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸாரின் சமூகப் பாதுகாப்பு
சமூகப்பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் மூன்றாவது பிள்ளை கிடைக்கப்பெறுமாயின் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும். கடந்த வருடம் இக்கொடுப்பனவு முப்படையின ருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் படைவீரர்களின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபா படி கொடுப்பனவு வழங்கப்படும். ஊனமடைந்துள்ள படை வீரர்களுக்கு வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, சுயதொழில் வேலைவாய்ப்புக்காக ‘ரண விரு திவிநெகும’ திட்டத்தின்கீழ் விசேட கடன்திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இத்திட்டத்துக்கென 1700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சகல ஊனமுற்ற படைவீரர் களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கவென 14ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
முதியோருக்கான நல திட்டம்
எழுபது வயதுக்கு மேற்பட்ட முதிய வர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 300 ரூபா விலிருந்து 1000 ரூபாவரை அதி கரிக்கப்படும். ஏனையவர்களுக்கு 100 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதி கரிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதியோர் சுகாதார நலன் களைக் கவனிக்க வென குடும்ப மட்ட தாதியர் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
தளவைத்தியசாலைகளிலும், ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் முதியோருக்கென விசேட வார்ட்டுக்கள் அமைக்கப்படும். இதற்குரிய தங்குமிட வசதிகளும் மேம் படுத்தப்படும். இத்திட்டத்துக்கென 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக் கப்பட்டுள்ளது.
புராதன சமயஸ்தல பிரதேச மேம்பாடு
புராதன சமயத் தலங்களை சூழவுள்ள பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் வசதி மற்றும் பாதைகள் என்ப வற்றை அபிவிருத்தி செய்வதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சட்ட உதவி
குறைந்த வருமானம் பெரும் குடும்பங் களுக்கு சட்டரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சட்ட உதவி ஆணைக்குழு கிராம மட்டத்தில் சட்ட உதவி அமர்வுகளை நடாத்தி வரு கின்றது. இந்நடவடிக்கை வருமானம் குறைந்த குடும்பங்களுக்குப் பெறும் நிவாரணமாக உள்ளது. இதற்கென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தண்டப் பணத்தை செலுத்த முடியாத வர்களாவர். அவர்களின் தண்டப் பணத்தை செலுத்தி அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் யோசனை முன்வைத்துள்ளேன்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து நாம் வெற்றியடைந்துள்ளோம். அதனால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், அவற்றை புனர்வாழ்வு நிலையங்களாகவும், திறந்தவெளி முகாம் களாகவும் மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கின்றேன்.
அரிசி ஏற்றுமதி வலயங்கள்
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் ரஜ ரட்ட ஆகிய நான்கு பிரதேசங்களில் அரசி ஏற்றுமதி வலயங்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி, விதை நெல் மேம்பாடு மற்றும் விரிவாக்கல் என்பவற்றை ஊக்குவிக்கவென ஆரம்ப முதலீடாக 200 மில்லியன் ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.
அரசி ஏற்றுமதி வலயங்களில் நவீன அரிசி ஆலைகளை அமைக்க முன்வரு வோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
குடிநீர்
தற்போது நடைபெற்றுவரும் குடிநீர் கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுமென 33 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சகல மாகாணங்களிலும் வளர்ச்சியடைந்துவரும் சிறு நகரங்களில் 55 குடிநீர் திட்டங்கள் செயற்படுத்தப்படும். இதற்கென 3200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் குடிநீர் வீணாவதையும், கசிவதையும் 48 சத வீதத்திற்குக் குறைப்பதற்கும் 680 மில்லி யன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானத்தில் இடம்பெற்றது


இன்று காலை இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கினும் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக அம்பாறை விமானப் படைத் தளத்தை வந்தடைந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையில் விமானத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதில் கல்முனை மாநகரின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரயாடியதாகவும், பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கின் அவரது
அம்பாறைக்கான விஜயத்தின் போது கல்முனை மாநகரத்திற்கும் வருகைதரவுள்ளதாகவும் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் எமது  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.






இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும்     க. பொ.த. சாதாரண மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
 
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை நற்பிட்டிமுனை அல் அக்சா  மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம். சாலித்தீன் ( சமீர்) ஆசிரியரின் வழிகாட்டலில் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் அவர்களின் ராஜேஸ்வரன் கன்ஸ்ரக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில்   நற்பிட்டிமுனை-EEA (Extreme  Education Association  ) இன் 6 வது வருட பூர்த்தியினை  முன்னிட்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடங்களில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை கொண்டு நடாத்தப்பட்ட  இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண  நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சாலித்தீன் ( சமீர்), பாடசாலை அதிபர் எம்.எல்.கையும்,  பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன்  ஆசிரியர் ஏ. அஸ்வாறுல் நிமைரி , மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.கைசர்,  எச்.எம்.எம்.நிஸ்தான், ஆர்.ரீ.இஸட். சுசான், ஐ.எம்.உபைதுல்லாஹ், ஏ.எம்.யாசிர், எம்.எச்.எம்.சர்ஜுன் தாரிக்,ஏ.கே.சப்ராஸ், ஏ.எம்.ஜெஸீல், என்.எம்.ஜர்ஸான், ஏ.எல்.எம்.கைதர், எச்.எம்.ஹிஸாம் , ஜே. லாபிர்,  என்.எம்.இர்சான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.













ஞாயிறு, 20 நவம்பர், 2011


கல்முனை வீதி விபத்தில்  ஸ்தலத்திலேயே ஒருவர் பலி 
கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும் ஆ பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று காலை கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி கல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்ட டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டதால் சம்மாந்துறையைச் சேர்ந்த அர்ஸாத் என்பவர்
ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இதே விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த எம். ஜனூஸ் என்பவரின் கால் பாகம் உடைந்துள்ளதுடன் இஸ்மாயில் நபீர் மற்றும் செங்லடி மல்லியபுரத்தைச் சேர்ந்த தேவராஜா ஆகியோர் பலத்த காயங்களுடன் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











மாணவர்களை ஏற்றிசெல்லும் வான்களை பதிவு செய்ய வேண்டும்


தவறினால் சட்ட நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் (SCHOOL VAN) அனைத்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் 2012ஆம் ஆண்டுக்குரிய பதிவை செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதியப்படாத வேன்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இம்சை ஏற்படுத்தும் விதத்தில், ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் சேவையிலீடுபடும் வேன்கள், பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் இருப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறும் பெற்றோரை, ஆசிரியர்களை, பொதுமக்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட ஆசனங்களுக்கு மேல் அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்லல் வீதிகளில் செல்லும்போது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் நிலையை வைத்திருத்தல், போன்ற விடயங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பொலிஸாரும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து பரிசீலனை செய்யும். பாடசாலை வேன்கள் 2012ஆம் ஆண்டு பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நவம்பர் 30 திகதி வரை எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது.
பாடசாலை வேன்களாக, பஸ் வண்டிகளாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தரமானதாக இருக்க வேண்டும். சிலர் ஓரங்கட்டிய வாகனங்களை புதுப்பித்து எந்தவித ஒழுங்கும் இல்லாமல் துருப்பிடித்த நிலையில் வாகனங்களை பாடசாலை வாகனங்களாக பயன்படுத்த முயற்சிக்கின்றன.
எனவே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு முறையை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ஜனவரி மாதம் பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலை வேன்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பதிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 நவம்பர், 2011



ஜனாதிபதியின் பதவியேற்பு தினம், பிறந்த தினம் நாளையிட்டு நாடெங்கிலும் விசேட வைபவங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினம் இன்றாகும். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளையாகும். இதனையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன.பயங்கரவாதத்தை ஒழித்து முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் தலைவர் என்ற வகையில் உலகத் தலைவர்களும் நாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


''நற்பிட்டிமுனை நெற்'' இணையத்தளமும் வாழ்த்துகிறது. 

சனி, 15 அக்டோபர், 2011





widgeo.net
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ்
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் பிரதிமேயராக சட்டத்தரணி  நிசாம் காரியப்பரும் தெரிவுசெய்யபட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் அறிவித்துள்ளார்.
03.10.1974 இல் பிறந்த கலாநிதி  சிராஸ் மீராசாஹிப்  மர்ஹூம். அபூபக்கர்மீராசாஹிப் உதுமாங்கண்டு பல்கீஸ் தம்பதியரின் மூன்றாவது புதல்வராவார்.

தனது ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தில் ஆரம்பித்த இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் சிறிது காலம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலும்  தனது கல்வியை தொடர்ந்தார். 
லண்டனில் தனது உயர்கல்வியை பயின்ற இவர் வியாபார முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களையும்  பெற்றுள்ளார். தனது உயர்கல்வியை பூர்த்திசெய்த பின்னர் கொழும்பு தெகிவளையில் மெட்ரோ பொலிற்றன் கல்லூரியை ஸ்தாபித்து கல்வித் துறைக்கு சேவையாற்றிவரும் இவர் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டதன் மூலம்
அரசியலில்பிரவேசித்தார்.

தனது முதலாவது பிரவேசத்தின் போதே மக்களின் மனங்களில் இடம்பிடித்த இவர் இத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்காக 16457  வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குப்பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலமாக கல்முனை மாநகரின் நான்காவது மேயராக தெரிவாகியுள்ளார்.

புதன், 12 அக்டோபர், 2011



widgeo.net

காலாவதியான டின் மீன்கள், உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

காலாவதியான டின் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நவீன சந்தை கடைகள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.
காலாவதியாகும் தினத்தை அடைய 60 வீத நாட்கள் உள்ள நிலையிலிருக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குக் குறைவான நாட்கள் உள்ள உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், காலாவதி திகதியை அண்மித்த பொருட்களையும் விற்கமுடியாது எனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
கொழும்பு உட்பட சில பகுதிகளில் உள்ள நவீன சந்தைகளில் புதிய டின் மீன்களுடன் காலாவதியான டின் மீன்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக வினவியதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான நவீன சந்தைகள் மற்றும் கடைகளை திடீர் சோதனை செய்து காலாவதியான பொருட்களை கைப்பற்றவும் தண்டம் அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார்.
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது காலாவதியான பொருட்கள் விற்றமை, விலைப் பட்டியல் தொங்கவிடாமை, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றமை என்பன தொடர்பில் பிடிபட்ட வர்த்தகர்களிடமிருந்து 10.4 கோடி ரூபா தண்டம் அறவிடப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011







  
ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் வியாழன் சத்தியப்     பிரமாணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான சத்தியப் பிரமாண வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற வுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சரிடம் இது பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர் தல் கடந்த 8ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 245 பேர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெறும் சத்தியப் பிரமாண நிகழ்வில் மாநகர மேயர்கள், பிரதி மேயர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

widgeo.net 

 

யார் கல்முனை மேயர் ? இன்று தீர்மானம்
 
 
கொழும்பில் உயர்மட்ட கூட்டம்



கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கூடும் கட்சியின் உயர் மட்டக் குழு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான
தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது.
இதனைத் தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உயர் குழுகூடி ஆராயவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கல்முனை மாநகர சபையின் மேயர் யார் என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 10 அக்டோபர், 2011






 Wishes for new Municipal Council Members

We Team ''Natpiddimunainet'' joins the people of Natpiddimunai and the people from Kalmunai municipality area in congratulating the new Municipal Council Members. This time Natpiddimunai achieved 3 seats. Mr. AHHM.Nafar (UNP), Mr. ML. Salideen(SLMC), Mr. CM. Mufeeth ( UPFA).

We hope these people's representatives will do their best to serve the people of Natpiddimunai and the entire Kalmunai municipality area.









ஏ. எச்.எச். எம். நபார்(ஐ.தே.க )
சீ.எம். முபீத் (ஐ.ம.சு.கூ )
 பறக்கத்(ஸ்ரீ .மு. கா. )
 ஏ.எம்.றியாஸ்-பெஸ்டர்  (ஐ.ம.சு.கூ ) 
நிசாம் காரியப்பர் (ஸ்ரீ .மு. கா. )

நற்பிட்டிமுனையில் இம்முறையும் மூன்று ஆசனங்கள்

நடைபெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்  முடிவுகளின்படி நற்பிட்டிமுனை சார்பாக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஏ .எச். எச். எம். நபார் 1616 வாக்குகளையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆசிரயர் எம்.எல். சாலிதீன்(சமீர் ) 1819 வாக்குகளையும் ,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  வேட்பாளர் சீ. எம். முபீத் 2133 வாக்குகளையும் பெற்று நற்பிட்டிமுனைக்கு இம்முறையும் மூன்று பிரதிநிதிகளை இவ்வூர் மக்கள் 3500 வாக்குகளை வைத்துக்கொண்டு வென்றெடுத்துள்ளனர்.

Results of Kalmunai Municipal Council Election - 2011

Name of the winners No. of Votes           Party             
AM. Mohamed Siras 16,457SLMC
Nizaam Kariyappar13,948SLMC
AM. Riyas6,018UPFA
AR. Ameer4,368SLMC
ZAH. Rahuman3,901UPFA
AM.Rakeeb3,509SLMC
ALM.Musthafaa2,999SLMC
MS. Umar Ali2,842SLMC
AM. Amirthalingam2,431TNA
AA.Basheer2,288SLMC
AM. Barakath2,251SLMC
Vivekaananthan2,238TNA
MIM. Firthous 2,149SLMC
CM. Mufeeth2,133UPFA
Alakenthiram2,153TNA
S.Jayakumaaran2,108TNA
ML. Salideen1,819SLMC
A.Nisaardeen1,802SLMC
AHHM. Nafaar1,616UNP

வியாழன், 29 செப்டம்பர், 2011

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

எதிர் வரும் 08ந்  திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில்  இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டி இடும் நற்பிட்டிமுனை அப்துல் கபூர் நௌசாத்  தலைமையில்  செயலகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ்  நற்பிட்டிமுனை மதிய குழு தலைவர் எம்.ஐ.நூர்முகம்மது.,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஐ.எல்.ரவுப்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

நடைபெற உள்ள 23 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 29 ஆம் திகதியும் நாளை 30 ஆம் திகதியும் நடைபெற உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவிக்கின்றது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு அலுவலக நேரங்கள் பயன்படுத்தப் படும் எனவும், தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றைச் சேர்ந்த ஒவ்வொரு அபேட்சகருக்கு அந்நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என தேர்தல்கள் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்குப் பதிவு செய்ததன் பின்னர் அன்றைய தினத்திலேயே அவை தபாலிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
தபால் மூல வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்பு மற்றும் சீ. எம். வீ. ஈ. ஆகிய அமைப்புக்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார பணிகள் அனைத்தும் முடிவடைதல் வேண்டும் எனவும், அதன் பின்னர் SMS தகவல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் செயலக உயர் அதிகாரி வலியுறுத்தினார்.

புதன், 28 செப்டம்பர், 2011

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு தினம்

(ed;wp Kalmunai News)


cs;Suhl;rp khfhz rigfs; mikr;ru; A.L.M.mjhTy;yhtpd; jiyikapyhd Njrpa fhq;fpu]; Vw;ghl;by; fle;j nts;spf;fpoik
ku;`Pk; M.H.M.m\;ug; epidT jpdKk; Fu;Md; jkhk; itgtKk; ew;gpl;bKidapy; eilngw;wJ. fy;Kid khefu rigf;fhd Ntl;ghsu; A.G.M.nesrhj; jiyikapy; ,lk;ngw;w itgtj;jpy; 
Mapuj;Jf;Fk;Nkw;gl;ltu;fs; fye;Jnfhz;ldu;. ku;`Pk; m\;ug; 
vkf;F fhl;ba topiambnahw;wp Njrpafhq;fpu]; gazpf;fpwJ mjdhy;
 ve;jnthU tplaj;jpYk; ehk; Njhw;Wg;Nghdjpy;iy Njrpa fhq;fpu]; jiytu; m\;ug;gpd; epidT epfo;Tfis,tUle;NjhWk; jpl;lkpl;L rpwg;ghf nra;J tUfpd;wJ. 
vd mq;F ciuahw;wpa mikr;ru; mjhTy;yh njuptpj;jhu;.
 ,e;epfo;tpy; fpof;F khfhz mikr;ru; M.S.cJkhnyg;ig khfhzrig cWg;gpdu;                   
 M.L.Jy;fu; eaPk; cl;gl ew;gpl;bKid Njrpa fhq;fpu]; kj;jpa FO mq;fj;jtu;fs; kf;fs; vd gyUk; fye;J nfhz;ldu;