செவ்வாய், 22 நவம்பர், 2011

கல்முனை மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானத்தில் இடம்பெற்றது


இன்று காலை இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கினும் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக அம்பாறை விமானப் படைத் தளத்தை வந்தடைந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையில் விமானத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதில் கல்முனை மாநகரின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரயாடியதாகவும், பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கின் அவரது
அம்பாறைக்கான விஜயத்தின் போது கல்முனை மாநகரத்திற்கும் வருகைதரவுள்ளதாகவும் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் எமது  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை: