செவ்வாய், 22 நவம்பர், 2011

இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும்     க. பொ.த. சாதாரண மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
 
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை நற்பிட்டிமுனை அல் அக்சா  மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம். சாலித்தீன் ( சமீர்) ஆசிரியரின் வழிகாட்டலில் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் அவர்களின் ராஜேஸ்வரன் கன்ஸ்ரக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில்   நற்பிட்டிமுனை-EEA (Extreme  Education Association  ) இன் 6 வது வருட பூர்த்தியினை  முன்னிட்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடங்களில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை கொண்டு நடாத்தப்பட்ட  இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண  நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சாலித்தீன் ( சமீர்), பாடசாலை அதிபர் எம்.எல்.கையும்,  பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன்  ஆசிரியர் ஏ. அஸ்வாறுல் நிமைரி , மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.கைசர்,  எச்.எம்.எம்.நிஸ்தான், ஆர்.ரீ.இஸட். சுசான், ஐ.எம்.உபைதுல்லாஹ், ஏ.எம்.யாசிர், எம்.எச்.எம்.சர்ஜுன் தாரிக்,ஏ.கே.சப்ராஸ், ஏ.எம்.ஜெஸீல், என்.எம்.ஜர்ஸான், ஏ.எல்.எம்.கைதர், எச்.எம்.ஹிஸாம் , ஜே. லாபிர்,  என்.எம்.இர்சான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.













கருத்துகள் இல்லை: