புதன், 13 நவம்பர், 2013

widgeo.net

நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்


நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம் என்ற தலைப்புடன் வெளியாகிய செய்திக்கு கல்முனை மாநகர சபையின் நற்பிட்டிமுனையை சேர்ந்த   எதிர்கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் (ஐ.தே.க )  தரும் விளக்கம் ..................
ஊருக்கும் என்னை ஒரு மாநகர சபை உறுப்பினராக்கிய மக்களுக்கும் என்றும் அடிபணிந்தவன் கட்டுப்பட்டவன்!!!

பிற்போக்குத்தனமான அரசியல் சிந்தனை படைத்த அரசியல் வாதிகளின் நடத்தைகளுக்கு உள்வாங்கப்பட்ட அரசியல் முனைத்தாக்குதலில் விளைவே தவிர என்னைப் பொறுதளவில் இக் கூற்றினை முற்றிலும் மறுக்கின்றேன். ஏனெனில் இவ்விடையம் தொடர்பாக மாத்திரமின்றி அதாவது மைதானம் பொதுச்சந்தை மற்றும் நூலகம் சம்மந்தமான பிரச்சினைகளை மாநகர சபையின் முதலாவது கூட்டத்தொடர் தொடக்கம் கடந்த இரண்டு வருடங்கள் சபையில் எண்ணிறைந்த தடவைகள் பேசப்பட்டும் நூலக பிரச்சினை மாத்திரம் முதலாம் கட்ட வேலை முடிவுற்று திறக்கும் தறுவாயில் இருக்கின்றது. ஆனால் கடந்த வருட மாநகர சபையின் ஒரு கோடி ரூயஅp;பா ஊர்களுக்கான அபிவிருத்தி ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனைக்கு ஏழு இலட்சம் ரூயஅp;பா மாத்திரம் ஒதுக்கீடு செய்தனர்.
 மாநகர சபைக்கு சொந்தமான மைதானம் பற்றி கடந்த காலத்தில் எண்ணிறைந்த தடவைகள் சுற்று மதில் அமைக்க வேண்டும் மைதானத்தை மண்ணிட்டு நிரப்ப வேண்டும் பார்வையாளர் அரங்கினை திறக்கவேண்டும் வீரர்களது பாவனைக்கு விடப்பட வேண்டும் என்று நான் சபையில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு உறையாற்றி ஒரேயொரு விடைதான் கிடைத்தது மாநகர சபையின் கடந்த முதல்வரின் வேண்டுகொளிற்க்கு இணங்க பொறியியளாளரின் பணிப்புரைக்கு அமைய தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பீடு செய்யப்பட்டு மைதானத்தின் வேலைகளை நிறைவேற்றுவதற்க்காக 48இலட்சம் ரூபாய் மாத்திரம் தான் என்று மதிப்பீட்டு முடிவு கிடைத்தது.
இந்த 48இலட்சம் ரூபா;வினை ஒதுக்கீடு செய்து மாநகர சபைக்கு சொந்தமான மைதானத்தினை அபிவிருத்தி செய்து அழகு பார்க்க முடியாத ஊர்வாதம் பிரதேச வாதம் கட்சி வாதம் கொண்டவர்கள் தான் இச் சபையில் காணப்படுகின்றார்கள். இவ்வாதங்கள் ஒழிக்கப்படுமேயாக இருந்தால் அல்லது தணிக்கப்படுமேயாக இருந்தால் கல்முனை மாநகர் நிச்சயமாக செழிப்புறும். கடந்த நான்கு வருடங்களாக நான் உறுப்பினராக வர முன்னரே இருந்து வெள்ளக் காலங்களில் மைதானத்திற்க்குள் வருகின்ற ஆற்று வாளைகளை (கோவா) அகற்றுவதிலும் மைதானத்தை சீர்செய்வதிலும் ஊர்மக்கள் அறிய எனது சொந்தப்பணத்தினை பயன்படுத்தி சீர்படுத்தியிருக்கிறேன். மாநகர சபையின் உதவிகளைக் கொண்டும் ஒரு சில வேலைகளை செய்திருக்கிறேன். வீராப்பு பேசுவதற்கு நான் இச்சபைக்கு வரவில்லை எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு ஆழும் தரப்பு உறுப்பினர்களினால் செய்யமுடியாத வேலைகளையும் செய்யப்படாத சேவைகளையும் தனி நபர்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் மதவழிபாட்டு நிலையங்களுக்கும் எனது இறைவனறிய எனது சேவைகளை செய்து கொண்டிருக்கிறேன். மீதியாயிருக்கும் எனது ஆயுள் முழுவதும் என்னால் எனது மக்களுக்கும் எனது பிரதேச மக்களுக்கும் இன மத கட்சி பேதமின்றி சேவையாற்ற தயாராக உள்ளேன்.
ஏன் என்றால் ஆக 45நாட்களுக்குள் சிறிலங்கா முஸ்லீம் காங்ரசின் கோட்டையென வர்ணிக்கப்படும் நற்பிட்டிமுனையில் 1600க்கும் அதிகமான மனாப்பைகளை மக்களுடைய ஆணையைப் பெற்று எனது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பரிபூரணமாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். இவ்விடத்தில் ஒரு விடையத்தினை குறிப்பிட வேண்டும் இறுதியாக 'நெல்சிப்'திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி 47இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனையின் மூன்று உறுப்பினர்களும் ஒருமித்தவர்களாக நின்று நற்பிட்டிமுனையில் 700மீட்டர் நீளமான நிலத்தொடர்பற்ற பாதைகளை நிர்மாணம் செய்வதற்க்கு கூட மாநகரசபை தயாராகவுள்ளது. அதில் நற்பிட்டிமுனை 2 3 மற்றும் 5 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பாதைகள் நிர்மாணிக்கப்படவுள்ளது இவ் வேலைத்திட்டத்தின் மூலம் நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரிவில் 90 வீதத்திற்க்கும் அதிகமான பாதைகள் பூரணப்படுத்தப்படவுள்ளது மீதியாகவுள்ள பாதைகளையும் வடிகாண்களையும் எங்களது மாநகர சபை பதவிக்காலம் முடியும் முன்னர் மாநகர சபையின் ஒத்துழைப்போடு இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவதற்க்கு தயாராகவுள்ளேன் இவற்றுக்கு எல்லாம் தீர்வாக நற்பிட்டிமுனை ஊடகத்தில் நவம்பர் 11ம் திகதி வெளியான செய்தியைக் கொண்டு கல்முனை மாநகர சபை ஆணையாளரினை நேரடியாக சந்தித்து இரண்டு

விடயங்களுக்கு தீர்வினை எடுப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
01. மைதானத்தின் பார்வையாளர் அரங்கினையும் அபிவிருத்தியையும் சபையின் ஒத்துழைப்போடு உரிய நபர்களோடு தொடர்பினை ஏற்ப்படுத்தி திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு மைதான அபிவிருத்திகளுக்கான நடவடிக்கைகளை செய்வதோடு அதுவரையில் அவ்விடத்தில் நடைபெறுகின்ற சமூக சீர் கேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்க்காக பொலீசாரின் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கை மேற்கொள்வது என உடனடியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
02. கட்டப்பட்டு நான்கு வருடங்களாகியும் பொதுமக்களின் பாவனைக்கு உத்தியோக பூர்;வமாக வழங்கப்படாத நற்பிட்டிமுனை பொதுச்சந்தை திறந்த கேள்விக் கோரலுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டும் குத்தகைக் கோரல்கள் மக்களால் செய்யப்படாததினால் மாநகரசபையின் ஒத்துளைப்போடு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர் சபை வர்தகர் சங்கம் ஊர் பிரமுகர்களை ஒன்று கூட்டி அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆக நற்பிட்டிமுனை மக்களின் வாக்கினை ஆணையாகப் பெற்று மக்களின் குறைகளையும் மக்களைப் பற்றி சிந்திப்பதற்காகவும் பேசுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் நான் ஒரு கௌரவ உறுப்பினராக இருக்கின்றேனே ஒளிய வீராப்பு பேசி கட்சியை பேசி கதிரையினை அழகுபடுத்துவதற்காக நான் உறுப்பினராக இருக்கவில்லை அப்படியோரு ஆணையை எனது உயிரிலும் மேலான எனது ஆதரவாளர்கள் என்னுடைய அபிமானிகள் பொதுவாக கல்முனை மாநகர மக்கள் எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களிக்கவில்லை.

கௌரவ ஏ.எச்.எச்.எம். நபார்
மாநகர சபை உறுப்பினர்
கல்முனை.



திங்கள், 11 நவம்பர், 2013


widgeo.net

நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்

யு.எம்.இஸ்ஹாக்

 உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் 49 இலட்சம் ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படாமலிருந்து வருகின்றது.
 இன்று அந்த பார்வையாளர் அரங்கு இஸ்லாத்துக்கு முரணான செயல்கள் இடம் பெறுகின்றது.விளையாட அமைத்த அரங்கு மது,சூதுக்கான மத்திய நிலையமாக மாறியுள்ளது. மைதானம் மழை நீரால் சேறும் சகதியுமாக மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது.

 இவற்றுக்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கல்முனை மாநகர சபை நிருவாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகின்றது. நற்பிட்டிமுனையில் இருந்து மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வேதாந்தம் பேசும் 03 மாநகர சபை உறுப்பினர்களே இந்த அநீதிக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன?



அதாவுல்லாவின் நிதி என்பதற்காக கவனம் எடுக்காமல் இருந்தால் நீங்கள் மூவரும் இந்த கிராமத்துக்கு செய்யும் பெரும் துரோகத் தனமாகும்.

வெள்ளி, 8 நவம்பர், 2013


widgeo.net

கல்முனை மேயர் சிராஸ் மீரஷாஹிப் ராஜினாமா!

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா  கடிதத்தினை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே தனது இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.



நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு 3 மாத கடூழிய சிறை




நீதிமன்றத்தை அவமதித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சனினால் நேற்று புதன்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதன்போது குறித்த நபரின் அணிந்திருந்த சேர்ட்டின் மேல் பொத்தான் திறந்து காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அதனை பூட்டுமாறு கூறிய போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனாலே குறித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.

புதன், 6 நவம்பர், 2013


widgeo.net

அமைச்சர் ஹக்கீமின் சித்து விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல்  கல்முனை மாநகர முதல்வர் பதவியை துரும்புச்சீட்டாக  வைத்துஒற்றுமையாக இருக்கின்ற இரண்டு ஊர்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்த முனைகின்ற அமைச்சர் றவூப் ஹக்கீமின் சித்து விளையாட்டை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் பதவிப்பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,
முதல்வர் நியமனத்தின்போது ஏற்கனவே பல குழப்பங்களை இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஏற்படுத்திய ஹக்கீம் மீண்டும் ஒரு முறை தன் சித்து விளையாட்டை ஆரம்பித்திருக்கின்றார்.
கடந்த மாநகர சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்று அவர் அறிவித்திருக்க வேண்டும். அல்லது அதிகூடிய விருப்பு வாக்குளைப்பெறுகின்ற ஒருவருக்குத்தான் முதல்வர் பதவி என்றாவது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் முதல்வர் யார் என்ற பிரச்சினையே தோன்றியிருக்காது. ஆனால் தமது கட்சியின் வாக்குச்சரிவை சரி செய்வதற்காக இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆசை வார்த்தைகளைக்கூறி பிரதேசவாதத்தைத் துாண்டிவிட்டதன் காரணமாக  ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க இருந்தவர்கள்கூட தமது ஊர்களுக்கு முதல்வர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மரத்திற்கு வாக்களித்தார்கள். கட்சி வெற்றி பெற்றாலும் முதல்வர் யார் ? என்று ஹக்கீம் செயற்கையாகத் தோற்றுவித்த பிரச்சினை, டயர் எரிப்புகளிலும், கடையடைப்புகளிலும், சொத்துக்களைச் சேதப்படுத்துவதிலும் போய் முடிந்தது. இப்பொழுது மீண்டும் மேயர் பதவியின் பெயரால் இரண்டு ஊர்களுக்குமிடையில் பிரதேச உணர்வைத்துாண்டிவிட்டு  குளிர்காய முற்படுகின்றார்.
கண்டியில் அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட்டால் தன் சீட்டு காலியாகிவிடும் எனவே ஏற்கனவே அவரால் மந்தைகள் என்று அடையாளம் காணப்பட்ட வாக்காளர்கள் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பொதுத்தேர்தலில் அவர் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் களமிறங்குவதற்கான ஆரம்ப செயற்பாடாகக்கூட இந்த பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.
அடுத்த பொதுத்தேர்தலில் தானும் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களிலும் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி, ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்களும், நொண்டியாக இருந்தாலும் தமது ஊரைச் சேர்ந்தவர் எம்.பி.யாக வேண்டும் என்ற பிரதேச உணர்வை ஊட்டுவதன் மூலம் மீண்டும் சரிந்திருக்கின்ற தமது கட்சியின் வாக்கு வங்கியை மீளக்கட்டி எழுப்புவதற்கான ஒரு முன் ஏற்பாடாகவும் இந்த மேயர் பிரச்சினை கிளப்பி விடப்பட்டிருக்கலாம்.
இரண்டு வருடங்களில் மேயர் பதவி சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று எதுவித எழுத்துமூல ஒப்பந்தமும் இல்லை. வெறும் வாய்ச்சொல் மாத்திரம்தான் என்று மேயர் கூறுகின்றார். றவூப் ஹக்கீம் தனது அரசியல் வாழ்க்கையில் வாக்குறுதியை எப்பொழுதாவது காப்பாற்ற முற்பட்டிருக்கின்றாரா ? என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். அவ்வாறான ஒருவர் வெறும் வாயினால் கூறிய ஒரு வார்த்தைக்காக முஸ்ட்டியை இறுக்கிக்கொண்டு ஒரு கை பார்த்தேதீருவேன் என்று களம் இறங்கியிருக்கின்றார் என்றால், “ சோழியன் குடும்பி சும்மா ஆடாது ” என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த தலைவர் கல்முனையின் முதல்வர் எவ்வாறு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவாகக்காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேசசபைத் தேர்தலில்  அக்கரைப்பற்று, சம்மாந்துறை போன்ற பிரதேச முதல்வர் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பதாகவே அறிவித்திருந்தார். அதேநேரம் கல்முனை உள்ளுராட்சி எல்லைக்குள் பல கிராமங்கள் அடங்கியிருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெறுகின்றவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பதாகவே அறிவித்தார். அதேபோன்று சாயந்தமருது, கல்முனைக்குடி கிராமங்களை விடவும் குறைந்த வாக்குகளைக்கொண்டிருக்கின்ற மருதமுனைக்கிராமத்தைச் சேர்ந்த ஐ.ஏ. ஹமீட் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெற்றபொழுது அவருக்கே பிரதேச சபைத் தவிசாளர் பதவி வழங்கப்பட்டது. அதனை அனைத்து ஊர்களும் மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டன.
இதேபோன்றதொரு அறிவிப்பை தலைவரின் பாதையைப்பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்ற றவூப் ஹக்கீம் கடந்த மாநகர சபைத்தேர்தலின்போது ஏன் செய்யவில்லை. அல்லது தேர்தல் முடிவுற்றபோதாவது கட்சி முன்னறிவிப்பு எதனையும் செய்யாததினால் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெற்றவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் என்றாவது ஏன் அறிவிக்கவில்லை. இரண்டு ஊர்களுக்குள்ளும் வீணான பிரச்சினையைத்தோற்றுவிக்க ஏன் அவர் களம் அமைத்தார் ? மட்டுமல்லாமல் இரண்டு வருட சுழற்சி முறை என்ற ஒரு விடயம் மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம் என்றாவது அவர் ஏன் அன்று சிந்திக்கவில்லை. அல்லது உண்மையாகவே சுழற்சி முறையில் வழங்குவதற்கு அவர் எண்ணியிருந்தால் எழுத்துருவத்தில் கட்சி முக்கியஸ்தர்களைச்சாட்சியாக வைத்து ஏன் அவர் ஒரு ஆவணத்தைப்பெறவில்லை. றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸில் பதவியைப் பெற்றுக்கொண்ட எவரும் இடைநடுவில் விட்டுக்கொடுத்த வரலாறு இல்லை என்ற உண்மைக்கு மத்தியில் இந்த விடயத்தில் வெறுமனே வாயினால் 2 வருடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையைக்கூறி  ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடித்துவிட்டு இப்பொழுது வரிந்து கட்டிக்கொண்டிருப்பதன் நோக்கமென்ன ? ஊர்களைக் குழப்புவதற்காகவா ?
இப்பிரச்சினை சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வேண்டுமென்ற  சிலரின் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தலாம். இலங்கை முஸ்லிம்களின் பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலம் என்பது அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பலமாகும். அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின் பலமாகும்.  கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய கிராமங்களின் ஒற்றுமையினால் வெளிக்கொணரப்படுகி்ன்ற பலமாகும். சுருங்கக்கூறினால் முழு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிநாதம் இந்த இரு ஊர்களின் ஒற்றுமை என்கின்ற பலத்திலிருந்தே புறப்படுகின்றது. அதனால்தான் 1994 ஆம் ஆண்டைய பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்பதாக சாயந்தமருதில் மறைந்த மாவட்ட நீதிபதி மர்ஹூம் ஹூசைனின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  மறைந்த தலைவர் அவர்கள்  “சாய்ந்தமருதிற்கு பிரதேச செயலகம் பெற்றுத்தருவேன். ஏனெனில் அது ஒரு நிருவாக அலகு, ஆனால் ஒருபோதும் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையை உருவாக்க முடியாது. ஏனெனில் உள்ளுராட்சி சபை என்பது ஒரு அரசியல் அலகு ”  கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின்  அடிப்படை அரசியல் பலத்தை கூறுபோடுவதற்கு பல சக்திகள் கண் கொத்திப்பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாமும் அதற்குத் துணைபோய்விட முடியாது. கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய கிராமங்கள் பெயரளவில் இரண்டு கிராமங்களாக இருந்தபோதிலும் அரசியலில் ஒரேபார்வையில் ஒரே சிந்தனையைக்கொண்ட ஒரு முழுப்பிரதேசமாக என்றென்றும் திகழ வேண்டும் என்ற கருத்தினை அவர் முன்வைத்திருந்தார்.
எனவே, கல்முனை மேயர் விடயம் றவூப் ஹக்கீமுடைய கட்சிப்பிரச்சினையாக இருந்தாலும் கல்முனைத்தொகுதி மக்களும் றவூப் ஹக்கீமுடைய சொத்துக்கள் அல்ல என்பதனால் அவர்களைப்பற்றிப்பேசுகின்ற உரிமை எங்களுக்கு இருக்கின்றது. எனவே, உங்களது அரசியல் ஆதாயத்திற்காக எங்களது மக்களைப்பிரித்துவிட வேண்டாம். என்று வேண்டுகிறோம். நாங்கள் மறைந்த தலைவருடன் இணைந்து வளர்த்தெடுத்த இக்கட்சியை  நீங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றீர்கள். போதாக்குறைக்கு எமது மக்களையும் பிரித்து அந்த அநியாயத்தையும் செய்துவிடாதீர்கள். கல்முனைத்தொகுதியில் கடந்த 13 வருடங்களில் நீங்கள் 13 கற்களைக்கூட துாக்கிவைக்கவில்லை. ஆகக்குறைந்தது மக்களைப்பல கூறுகளாக பிரிக்காமலாவது இருங்கள். என்று வேண்டுகிறோம். உங்களது கட்சி இன்று இருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இரண்டு கிராமங்களும் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதற்கு அநியாயம் செய்துவிடாதீர்கள். அதேநேரம் மேயர் சிராஸ் அவர்களிடம் நாம் வேண்டுவது,   உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் இருக்கின்ற பிரச்சினைகளை உங்கள் கட்சி மட்டத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அதனை ஊருக்குள் கொண்டுவந்து பதவிக்காக ஊர் உணர்வைத்துாண்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள். ( வாக்குறுதி என்பது எழுத்துருவில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதையும் தாண்டி வாக்குறுதி கொடுப்பதும், அதனை காற்றில் பறக்க விடுவதும், அதற்கெதிராகச் செயற்படுவதும் எமது இன்றைய தலைவர் எமது கட்சிக்குள் பல சந்தர்ப்பங்களில் காட்டித்தந்த முன்மாதிரியாகும். அதைப்பின்பற்றித்தான் பலரும் இந்தக்கட்சியில் வாக்குறுதியை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்கள். கட்சியின் அதே கலாச்சாரத்தைப் பின்பற்றித்தான் நானும் செயற்படுகின்றேன். வித்தியாசமாக எதையும் செய்துவிடவில்லை.  என்பதுதான உங்களது நிலைப்பாடு என்றால் அதை கட்சி ம்ட்டத்தில் போய் தீர்த்துக்கொள்வதுதான் பொருத்தமானதாகும்).
அதேநேரம் பிரதிமேயர் நிஸாம் காரியப்பர் அவர்கள் தலைவருடன் இருந்த ஒருவர் என்று உரிமை கோருகின்ற ஒருவர். மறைந்த தலைவர் கல்முனை உள்ளுராட்சி சபைத்தலைவரை எவ்வாறு தெரிவுசெய்ய வேண்டுமென்ற உதாரணத்தைக்காட்டி இருந்தும், நீங்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெறாத சூழ்நிலையில் எந்த அடிப்படையில் மேயர் பதவியைக்கேட்டு அன்று பிரச்சினையைக் கிளப்பினீர்கள் ? உங்களுக்கு மேயர் பதவி தருவதாக தேர்தலுக்கு முன் உங்கள் தலைவர் வாக்குறுதி ஏதும் அளித்திருந்தால் அதனை உங்கள் தலைவரைக்கொண்டு ஏன் பகிரங்கப்படுத்த முனையவில்லை. அல்லது கட்சியின் மூலம் ஏன் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தவில்லை. அவ்வாறு ஏதும் செய்யாமல் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளையும் பெறாமல் மறைந்த தலைவரின் முன்மாதிரியையும் புறக்கணித்துவிட்டு மேயர் பதவிப்பிரச்சினையைக்கிழப்பி ஏதோ முழுக்கல்முனைக்குடியும் மேயர் பதவி இல்லாமல் ஏங்கிக்கிடப்பது போலவும், எனவே கல்முனைக்குடிக்கு மேயர் பதவி வேண்டும் என்றும் ஒரு பிரேமையை ஏன் தோற்றுவிக்க அன்று முயற்சித்தீர்கள் ? அன்று மருதமுனையைச் சேர்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்களைத் தவிசாளராக்கிவிட்டு அதனை அழகுபார்த்த கிராமங்கள்தான் கல்முனைக்கடி, சாய்ந்தமருது கிராமங்களாகும்.
எனவே, சாய்ந்தமருதோ, கல்முனைக்குடியோ மேயர்பதவிக்கு ஏங்கவில்லை என்பதைப்புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் பதவியில் பிரச்சினைகள் இருந்தால் அதை உங்கள் கட்சி மட்டத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சில்லறைப்பதவி பிரச்சினைகளை ஊர் மட்டத்திற்குள் கொண்டுவந்து உள்ளுர் பிரச்சினையாக்காதீர்கள்.
இன்று முஸ்லிம் சமூதாயம் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதேசவாதத்திற்குள்ளும் புதையுண்டுபோகின்ற  பரிதாப நிலையை உருவாக்க வேண்டாம், என்று பொன்முட்டையிடும் வாத்தின் சொந்தக்காரன் றவூப் ஹக்கீமிடமும், மேயர் ஸிராஸ் மீராசாஹிபிடமும், பிரதி மேயர் நிஸாம் காரியப்பரிடமும் சமூகத்தின்பெயராலும், கல்முனைத்தொகுதி மக்களின் பெயராலும் வினயமாக வேண்டுகின்றோம். எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும், உங்களுக்கும் சரியான பாதையைக் காட்டுவானாக !

வெள்ளி, 1 நவம்பர், 2013


widgeo.net

போலி சாரதி அனுமதிப்பத்திரம்; இருவர் கைது



போலி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த சவளக்கடை போக்குவரத்து பொலிஸார், வீதியால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடம் காப்புறுதி இல்லாத காரணத்தால் அவரின் அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் வாங்கிவைத்துவிட்டு அவருக்கு தண்டத்துக்கான பற்றுச்சீட்டை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை புதிதாக வழங்கிய சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை கொழும்பு தேசிய போக்குவரத்து  தலைமையகத்தில் சோதனை செய்தபோது வழங்கப்பட்ட சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  நேற்று வியாழக்கிழமை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவரையும்  அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை  வைத்திருந்ததாகக் கூறப்படும்   நபர் கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரை நாடி மோட்டார் சைக்கிளுக்கும் முச்சக்கரவண்டிக்கும்  சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக  முகவருக்கு 26,000 ரூபா வழங்கியுள்ளார்

இதன் பின்னர் ஒருவாரகாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய வானங்கள் ஓட்டுவதற்கான புதிதாக வந்துள்ள சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தை முகவர் வழங்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது

இது தொடர்பான விசாரனையை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.     

widgeo.net

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!


கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் சற்றுமுன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரிடம் கையளிக்கப்பட்டது.

இத்தீர்மானங்களை ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கையளிக்கவுள்ளதுடன் தொடர்ந்தும் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.அமீர்;, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், ஏ.எம்.நபார், எம்.முபீத் மற்றும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது வர்தக சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.நஸீர்; மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கட்சி போராளிகள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 





கல்முனை மாநகர முதல்வர் இராஜினாமா இழுபறி தொடர்பாக எதிர்கால முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருடன் இணைந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என்பன மேற்கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

widgeo.net

கல்முனை மேயராக இன்றிலிருந்து சிராஸ் மீராசாஹிப் செயற்பட முடியாது

 


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

கல்முனை மேயர் பதியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் இந்த இராஜினாமாவிற்கான காலக்கெடு நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைகின்றது. எனினும் இதுவரை சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லை.

'இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது. இதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கமாட்டாது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். அவ்வாறு வழங்குவார்களாயின் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.