வெள்ளி, 8 நவம்பர், 2013



நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு 3 மாத கடூழிய சிறை




நீதிமன்றத்தை அவமதித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சனினால் நேற்று புதன்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதன்போது குறித்த நபரின் அணிந்திருந்த சேர்ட்டின் மேல் பொத்தான் திறந்து காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அதனை பூட்டுமாறு கூறிய போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனாலே குறித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: