திங்கள், 3 மார்ச், 2014

மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் கிளை கல்முனையில் திறப்பு




கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் முயற்சியினால் மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் கிளை கல்முனையில் திறக்கப்பட்டுள்ளது.(நகர மண்டப வீதி, கல்முனைக்குடி) இதன் கிளை சந்தைப்படுத்தல் முகாமையாளர் றினோஸ் ஹனீபா தலைமையில் திறப்பு விழா வெகுவிமர்சயாக இடம்பெற்றது. இதில் விஷேட அதிதிகளாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச் நவாஸ் மற்றும் மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் கே.எம் றிஸ்வி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  உயர்தர பரீட்சையில் இரண்டு பாடங்கள் சித்தியடைந்த மாணவர்கள் வீட்டில் இருந்தவாரே தமது பட்டப்படிப்பினை தொடர முடியும். தொடர்வுகள் 077 901 2004,077 923 8024,077 6575712