வெள்ளி, 27 டிசம்பர், 2013

ரயிலில் தீ: தப்பிக்க முயன்றவர்களில் மூவர் பலி; பலர் காயம்






மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களில்,  கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் இலங்கை வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் தற்சமயம் அறியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Views: 1131