ஞாயிறு, 22 டிசம்பர், 2013

நற்பிட்டிமுனை பளீல் மகன் முஹமட் நிஹாத் மருத்துவத் துறைக்கு தெரிவு !!






unnamed (76)நேற்று முன்தினம் வெளியாகிய க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் தோற்றிய கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி மாணவன் முஹமட் பளீல் முஹமட் நிஹாத் A ,2 B  சித்திபெற்று அம்பாறை மாவட்டத்தில் 21ஆவது இடத்தினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.
கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த இம்மாணவன் மர்ஹும் பளீல் ,இப்ராஹீம் ஆயிஷா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வராவார்.
இம்மாணவனின் தந்தையார் மர்ஹும் ஆதம்லெப்பை முஹமட் பளீல் முன்னாள் காத்தான்குடி பிரதேச செயலாளரும், ஊடகவியலாளரும் சிறந்த எழுத்தாளருமாவார்.