வியாழன், 27 மார்ச், 2014

க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்




க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று கூறுகிறது.

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAMS என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் சுட்டிலக்கத்தை டைப் செய்து Dialog 7777 என்ற இலக்கத்திற்கும் Mobitel 8884க்கும் Airtel 7545க்கும் Hutch 3926க்கும் Etisalat 8888க்கும் அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். http://www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

உத்தியோக பூர்வ இணையத்தில் ஏப்ரல் 10 அளவில் வெளியாகலாம்  என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு





பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரணத் குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடுகேட்டு ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்தார்.