நற்பிட்டிமுனை ''ஒக்ஸ்போர்ட்'' விளையாட்டுக்கழகம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 02 .09 .2011 ம் திகதி மின் ஒளியிலான கிரிக்கெட் போட்டியினை நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கத்தில் நடாத்தவுள்ளனர். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர், எனவே இவ்வூர் மக்கள் ,விளையாட்டு வீரர்கள் தாங்களுக்கு ஒத்தாசை நல்குமாறு ''ஒக்ஸ்போர்ட்'' விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வீ.எம். மக்பூல் கேட்டுக் கொள்கின்றார். அனைவரும் வருக! ஆதரவுதருக! இச் சுற்றுப் போட்டியின் முடிவுகளை எமது இணையமான Natpiddimunainet இல் காணலாம்.