சனி, 19 அக்டோபர், 2013


widgeo.net


பாராட்டு விழா

gpuhe;jpa nra;jpahsu;: MI.Nirose)

 மருதமுனை அல் - மானார் மத்திய கல்லூரியில் இன்று (19.10.2013) இடம் பெற்ற பாராட்டு விழாவின் போது  முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களுக்கு மருதமுனை மக்கள் சார்பாக இவ் விழாவின் தலைவர் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் காதர் இப்றாஹிம்  வாழ்த்துப் பாவினையும்- நினைவுச் சின்னத்தினை சமாதான நீதவான் ஜமால்டீன் என்போர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், பொருளாதாரத் துறை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அதிதிகளாக கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கருஜெயசூரிய , திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி, பைசல் காசிம் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் மற்றும் உறுப்பினர்களான ஏ.எல்.தவம், எம்.எல். ஜெமீல் மற்றும் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.












widgeo.net

செயலாளராக மாநாகர சபை  உறுப்பினர்  பரக்கத்துல்லாஹ் நியமனம்


 அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டம் அட்டளைசேனையில் இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராச்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு அதற்கான செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார்