முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் அக்கரைப்பற்றில் பதுக்கிவைக்கப்பட்ட 1500 துவிச்சரக்கரவண்டிகள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் முயற்சியினாலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் இலஞ்சமாக வழங்குவதற்கு பதுக்கி வைக்கப்பட்ட பல பொருட்கள் தற்போது பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்கு இந்த துவிச்சக்கரவண்டிகளை மறைத்து வைத்திருக்கலாமென நம்பப்படுகிறது.