எது தவறு அன்பே ...?
உன்னைக் கேட்காமல்
உன்னைக் கேட்காமல்
உன்னை நினைத்தது தவறா?
இது -
தவறென்றால் அனுமதியின்றி
உன்- உடலை உரசும்
காற்றும் தவறு!
பூவிடம் கேட்காமல்
முத்த மழை பொழியும்
வண்டும் தவறு!
இயற்கையை ரசித்து
இரசிக்க எழுதிய
கவிஞனும் தவறு!
கண்களை கேட்காமல் -வரும்
கனவும் தவறு!
இதை நீ புரிந்தால்
எது தவறென்று
தெரியும் உனக்கு.
நற்பிட்டிமுனை -சப்ரோஸ்
இறக்க முடியாத நினைவுகள்
நான் -
என் தனிமையில்
மகிழ்சியை தேடினேன்
என் -ஆத்மா
அவளை நெருங்கி
நகர்ந்தது....
அப்போது என்னிதயம்
ரகசியமாய்
அவள் பெயர் சொல்லிற்று !
தொடர்ந்தேன்,
நகர்ந்தேன்-அவளின்
நகைப்புடன்
இவ்வாறே சில
இரவுகள்
இனிமையாய் போனது !
என்னிதயத்துடன்
அவளிதயமும் -சேர்ந்து
அழுது கொண்டிருக்கும்
அந்த மெல்லிய
இரவுகளில் !
அவள்
வார்த்தைகளில் அழிந்தது
வாலிபமும் , இருதயமுந்தான்
ஆனால்....
கனமாகிப் போனது-என்
கண்ணீர் !
எங்கள்
நினைவுகளில்
வேர் பிடித்த போது
கிள்ளி எறிந்தனர்
கிறுக்கர்கள் சிலர் !
இப்போது
என் நினைவுகள்
அவளோடல்ல
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது !
இருந்தாலும்.... இருந்தாலும்
என்னிதயம்
என்றுமவள்
பெயர் சொல்லி
துடித்துக் கொண்டிருக்கும்
இறக்க முடியாத
நினைவுகளுடன்....
நற்பிட்டிமுனை -சப்ரோஸ்
இரண்டு இதயம்
உன்னை-
ஒருமுறை பார்த்ததற்காகவா
அன்பே - ஆயுள் முழுவதும்
எனக்குள்
இரண்டு இதயத்தை
சுமக்கச் சொல்கிறாய் .......?
நற்பிட்டிமுனை -ஸமான்