வெள்ளி, 1 நவம்பர், 2013


widgeo.net

போலி சாரதி அனுமதிப்பத்திரம்; இருவர் கைது



போலி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த சவளக்கடை போக்குவரத்து பொலிஸார், வீதியால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடம் காப்புறுதி இல்லாத காரணத்தால் அவரின் அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் வாங்கிவைத்துவிட்டு அவருக்கு தண்டத்துக்கான பற்றுச்சீட்டை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை புதிதாக வழங்கிய சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை கொழும்பு தேசிய போக்குவரத்து  தலைமையகத்தில் சோதனை செய்தபோது வழங்கப்பட்ட சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  நேற்று வியாழக்கிழமை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவரையும்  அதனை வழங்கியதாகக்  கூறப்படும் முகவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை  வைத்திருந்ததாகக் கூறப்படும்   நபர் கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரை நாடி மோட்டார் சைக்கிளுக்கும் முச்சக்கரவண்டிக்கும்  சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக  முகவருக்கு 26,000 ரூபா வழங்கியுள்ளார்

இதன் பின்னர் ஒருவாரகாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய வானங்கள் ஓட்டுவதற்கான புதிதாக வந்துள்ள சிம்காட் சாரதி அனுமதிப்பத்திரத்தை முகவர் வழங்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது

இது தொடர்பான விசாரனையை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.     

கருத்துகள் இல்லை: