செவ்வாய், 11 அக்டோபர், 2011







  
ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் வியாழன் சத்தியப்     பிரமாணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான சத்தியப் பிரமாண வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற வுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சரிடம் இது பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர் தல் கடந்த 8ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 245 பேர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெறும் சத்தியப் பிரமாண நிகழ்வில் மாநகர மேயர்கள், பிரதி மேயர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

கருத்துகள் இல்லை: