சனி, 17 ஜனவரி, 2015

வாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்ட நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்





மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள 12ஆம் கொளனியைச் சேர்ந்த 45 வயதுடைய 11 பிள்ளைகளின் தந்தையான சம்சுதீன் நூறுமுஹம்மது என்பவர் ஆலையடி எம்-27ஆம் பிரதான வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டடிருந்த போது இன்று காலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சடலத்தினை தேடியவுடன் குறிப்பாக இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னர் ஆலயடி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாலத்தின் கீழ் மீட்கப்பட்டு சடலம் மத்தியமுகாம் வைத்திசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வேளாண்மைகளுக்கு பாய்ச்சுவதற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அவ்வாய்க்காலில் மீன்பிடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீர் திறந்து விடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வாய்க்காலில் குளிப்பதையும், மீன்பிடிக்க முயற்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மத்தியமுகாம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ரி.ஏ.டி.எஸ்.செனவிரத்ன பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: