சனி, 15 மார்ச், 2014

சந்திரிக்கா, ஹக்கீம் ஆகியோரின் உண்மைகளை வெளியிடுவோம்: பொதுபல சேனா மிரட்டல்



20140313-192951.jpgமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை இன்று வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம்.
சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.

அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிறுவனம் ஒன்று இலங்கையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பௌத்தம் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாம் வழிப்பாட்டுத் தலங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்டே ஞானசார தேரர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: