வியாழன், 13 மார்ச், 2014

ஜெனிவாவுக்கு எதிராக ஜெனிவாவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்



ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (14) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமாகவுள்ள இந்தப்பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை நகர் ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட பள்ளிவாசல்கள், வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: