வியாழன், 19 டிசம்பர், 2013




''பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தடை விதித்­தமை நீங்கள் கூறும்­வரை எனக்கு தெரியாது'': ஹக்கீமிடம் ஜனாதிபதி


 தெஹி­வளை பிர­தே­சத்தில் மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது பற்றி தம்­மிடம் அமைச்சர் ஹக்கீம் புதன்­கி­ழமை கூறும்­வரை வேறெ­வரும் அது­பற்றி சொல்­ல­வில்­லை­யென ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார். இந்த விட­யத்தில் உரிய கவனம் செலுத்­தப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி அமைச்சர் ஹக்­கீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.
தெஹி­வளைப் பகு­தியில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு பொலிஸார் தடை விதித்­துள்­ளமை குறித்தும் முஸ்லிம் பள்ளி வாசல்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­படும் வன்­மு­றைகள் தொடர்­பிலும் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கவ­னத்திற்கு ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்­க­ரஸின் தலை­வரும் நீதி­ய­ம­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கொண்­டு­வந்­துள்ளார்.
நேற்றுக் காலை அலரி மாளி­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் குறித்து அர­சாங்­க­மா­னது உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் கொந்­த­ளிப்­பையும் விச­னத்­தையும் உண்­டு­பண்­ணு­கின்­றது. எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தெஹி­வளை களு­போ­வில மஸ்­ஜிதுல் தாருல் ஷாபி, தெஹி­வளை தாருல் அர்க்கம், தெஹி­வளை அத்­தி­டிய மஸ்­ஜிதுல் ஹிபா ஆகிய பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு பொலிஸார் வற்­பு­றுத்­து­வது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்டி, பள்­ளி­வாசல் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தியில் கொதிப்­பையும் விச­னத்­தையும் உண்டு பண்­ணு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.
விஷம சக்­தி­களால் உந்­தப்­பட்டு, அர­சாங்க உயர்­மட்­டத்­திற்கு தெரி­யாத விதத்தில் பொலிஸார் தான்­தோன்­றித்­த­ன­மாக இவ்­வா­றான இன முறு­கலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சமய விரோத நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வது கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­தென்று அமைச்சர் ஹக்கீம் கூறி­யுள்ளார்.
மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்பில் தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என அமைச்சர் ஹக்­கீ­மிடம் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி, தெஹி­வளை பிர­தே­சத்தில் மத்­ரஸா நடத்­து­வ­தென்று அனு­மதி பெற்று தொழுகை நடத்தும் ஓரி­டத்தைப் பற்றி மட்டும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சொல்­லி­யுள்ளார். அது­பற்றி அமைச்சர் பெள­சியும் தம்­மிடம் சுட்­டிக்­காட்டி கவலை தெரி­வித்­த­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் முஸ்­லிம்கள் நாள்­தோறும் ஐவே­ளைகள் தொழு­கையில் ஈடு­ப­டு­வது இஸ்­லாத்தின் கட்­டாய கட­மை­களில் ஒன்று என்ற கார­ணத்­தினால் மத்­ர­ஸாக்­களில் தொழு­வ­தைக்­கூட தடுக்­கக்­கூ­டா­தென ஜனா­தி­ப­தி­யிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: